Thursday, January 24, 2013

மீண்டும் பள்ளிக்கு போகலாம்(1994-95)Get-To-Gather-3

யார் இவங்க? அப்படிங்கற தலைப்புல 94-95 வருட மாணவர்களின் கீழ்க்கண்ட புகைப்படத்த 30.12.12 அன்று நம் வலைத்தளத்தில் பிரசுரம் செய்திருந்தோம்...



ஏன் அப்படி ஒரு ஸ்பெஷல் பதிவுன்னா.... 

இந்த வருட மாணவர்கள் 10ம் வகுப்பு முடிச்ச பிறகுசேர்ந்து புகைப்படம் எடுத்துக்கவே இல்ல, சொல்லபோனா இதுதான் அவுங்களோட முதல் குழும புகைப்படம்(Group Photo).. ரொம்ப வித்தியாசமான விசயமா இருக்குல? இந்த சந்திப்பிற்காக தொடர்புகொண்டபொழுது நிறையபேர் இந்த மாதிரி சேர்ந்து புகைப்படம் எடுக்கணும் அப்படிங்கரக்காகவே வருவதாக சொன்னாங்கன்னு கௌரிசங்கர் அண்ணன் சொன்னார். 

இனி அவங்களோட சந்திப்பின் நிழல்படங்கள்.....  
  
எப்படி இருந்த நீ.....இப்ப இப்படி ஆயிட்டியே.... நலம் விசாரிக்கும் ரவி...



LADIES FIRST....
Boys:நம்ம வழக்கம்போல கடைசி பென்ச்ல தான் உக்காருவோம்..



பழனிசாமி :வா மச்சி குண்டு விளையாடலாம்...
பிரகாஷ் :டேய் மாப்ள நீயே குண்டாதான் இருக்க உன்ன வச்சு விளையாடிடலாமா?  



கீழ்க்கண்ட இந்த புகைபடத்தில இருக்கிறது திரு&திருமதி  ராஜ்குமார் அவர்கள்,இவுங்க குடும்பத்திற்க்கு நம் பள்ளியும் நாமும் ரொம்ப கடமைபட்டிருக்கோம்.. அது என்னன்னு தனி பதிவா தருகிறோம்...  

எனக்கு இவ்வளவு தான் சார் தெரியும் அதுக்கு மேல ஒன்னும் தெரியாது சார்-G.தனபால் 


அடேங்கப்பா இவ்வளவு பெரிய லிஸ்டா? வேறபக்கம் பாக்கிறமாதிரி அப்படியே போயிரவேண்டியதுதான்-விஜயகுமார்

நாங்கள்லாம் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்-கார்த்தி.


ஏ சிங்கம்போல நடந்து வாரான் செல்ல பேராண்டி-கௌரிசங்கர்.


நான் ஒரு பச்ச குழந்தைங்க..சொன்ன நம்புங்கப்பா..-பிரகாஷ்


சண்டேனா எங்களுக்கு மூணு மீல்ஸ் வேணும்--விருந்தோம்பல். (தாய்குலமே எங்கள மன்னிச்சுடுங்க) 


உங்கள பாத்தாலே ஒரே சிரிப்பு சிரிப்பா வருது-கௌரி அக்கா.


இனிமே யாரு கோயம்புத்தூர் வந்தாலும் எங்க ஹோட்டல்ல வந்து மறக்காம ப்ரீயா சாப்பிட்டு போகணும்-கவிதா.


நான் கணக்கு சரியா போடலீன எங்கப்பா இந்த எடத்துலதான் அடிப்பாரு தெரியுமா..-ரவி.


நான் ரொம்ப அடக்கமான மாணவின்னு எல்லாரும் சொல்லுவாங்க-பெமினாதேவி.


உங்க நண்பர்கள பார்த்ததுல கடைசீல எங்கள மறந்துட்டிங்களே மக்கா..-குட்டீஸ்.


நானும் இந்த குழந்தை மாதிரித்தான்,ஆசிரியர் பாடம் எடுத்தா,உடனே  தூங்கீருவேன்..

சார் உங்களுக்கே தெரியும் படிக்கறப்ப கேட்டாலே சும்மாதான் நிப்போம்-சத்தியமூர்த்தி 


நான் அப்பவே விஜயகாந்த் மாதிரி பேசுவேன்,ஆங் யார்ற அது..-பழனிசாமி.


ஐய்யா நல்லா இருக்கிங்களா?லம் விசாரிக்கும் மாணவியர்.


வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..